சேலம் அருகே நாய் கடித்ததாக அளித்த புகாரில் வளர்ப்பு நாய் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்தவர் ஹரி விக்னேஷ். இவரை நாய் கடித்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வளர்ப்பு நாயின் உரிமையாளர் பிரபாகர் என்பவரை கைது செய்தனர். செல்லப்பிராணியை அஜாக்கிரதையாக பராமரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.