வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தன் உயிரை கொடுத்து கொன்ற ’நாய்’ - உருக்கமான சம்பவம்

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தன் உயிரை கொடுத்து கொன்ற ’நாய்’ - உருக்கமான சம்பவம்
வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தன் உயிரை கொடுத்து கொன்ற ’நாய்’ - உருக்கமான சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை வளர்ப்பு நாய் கடித்து கொன்றது. பாம்பு கடித்ததில் நாயும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றியுள்ள பிராணிக்கு எடுத்துக்காட்டாக நாயை சொல்வார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே தனது உரிமையாளர் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்றை நாய் கடித்துக் கொன்றதோடு பாம்பு கடித்ததில் தானும் உயிரிழந்து தனது நன்றியின் வெளிப்பாட்டை எடுத்துக்காட்டியுள்ளது.

சினிமாக்களில் வீட்டிற்கு தேவையான பொருட்களை கடைக்கு சென்று வாங்குவது, தன்னை வளர்த்த உரிமையாளர்களை, அவர்கள் வீட்டில் உள்ளவர்களை திருடர்களிடம் இருந்து செல்லப்பிராணியான நாய்கள் காப்பாற்றுவது போன்ற சம்பவங்கள் இடம் பெற்றிருக்கும். இதே போன்ற சம்பவங்கள் நிஜத்திலும் ஆங்காங்கே நடைபெறுவது உண்டு.

அதன்படி புதுக்கோட்டையில் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலுப்பூர் அருகே உள்ள குறிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் ஜெயந்த். இவரது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். வீட்டின் முகப்பு பகுதியின் வழியாக நல்ல பாம்பு ஒன்று வந்து வீட்டிற்குள் நுழைய முயன்றது. இதனை பார்த்த நாய், பாம்புடன் கடுமையாக சண்டையிட்டது. இதில் நாய் கடித்ததில் பாம்பு இறந்தது.

அதே நேரத்தில் பாம்பு கடித்ததில் அதன் விஷம் நாய்க்கு ஏறியதில் வாயில் நுரை தள்ளியபடி நாயும் இறந்தது. வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது பாம்பும், நாயும் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. நாய் பாம்பினை தன் வாயில் கைவ்வி பிடித்து கடித்தது. முதலில் பாம்பு இறந்துவிட்டது. பாம்பு இறந்த சில நிமிடங்களில் பாம்பின் விஷம் ஏறிய நாயும் பரிதாபமாக இறந்தது. தன் உயிரை கொடுத்து காப்பாற்றிய நாயும் இறந்ததுகண்டு வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை கொன்று, தனது உயிரை விட்டு குடும்பத்தினரை காப்பாற்றிய நாயின் உடலுக்கு ஜெயந்த் அவருடைய குடும்பத்தினர் பூக்களை தூவி தங்களது கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இதுவல்லவா விசுவாசம்! - தன் உரிமையாளருக்காக உயிரைவிட்ட நாய் <a href="https://twitter.com/hashtag/Pudukkottai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Pudukkottai</a> | <a href="https://twitter.com/hashtag/Dog?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Dog</a> | <a href="https://twitter.com/hashtag/DogDeath?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DogDeath</a> <a href="https://t.co/1btzhKpesD">pic.twitter.com/1btzhKpesD</a></p>&mdash; PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) <a href="https://twitter.com/PTTVOnlineNews/status/1581675071361335296?ref_src=twsrc%5Etfw">October 16, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com