கடலூர் மாவட்டம், திட்டக்குடியில், பழைய காலத்து கிழக்கிந்திய கம்பெனியின் 100 ரூபாய் நோட்டை 50 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்த நல்லத்தம்பி என்பவரிடம், கிழக்கிந்திய கம்பெனியின் பழைய 1௦௦ ரூபாய் நோட்டு வைத்திருப்பதாகவும், இது அபூர்வமானது என்று கூறியும், 50 லட்சம் ரூபாய்க்கு விற்க இளைஞர் ஒருவர் அணுகியிருக்கிறார். நல்லதம்பியிடம் பேரம் பேசியபோது இளைஞரை கடலூர் மாவட்ட திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார், கைது செய்தனர்.