மதுபோதையிலேயே பாலாற்றில் உறங்கியவரை அடித்துச் சென்ற வெள்ளம் - 3 நாட்களாக தவித்தவர் மீட்பு

மதுபோதையிலேயே பாலாற்றில் உறங்கியவரை அடித்துச் சென்ற வெள்ளம் - 3 நாட்களாக தவித்தவர் மீட்பு
மதுபோதையிலேயே பாலாற்றில் உறங்கியவரை அடித்துச் சென்ற வெள்ளம் - 3 நாட்களாக தவித்தவர் மீட்பு
மூன்று நாட்களாக பாலாற்று பாலத்தின் அடியில் சிக்கிய நபரை பத்திரமாக மீட்டுள்ளனர் தீயணைப்பு துறையினர்.
பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக செங்கல்பட்டு அருகே பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் சுமார் 13,500 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக பாலாற்று பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட நபரை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
உடனடியாக இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாகப் போராடி பாலாற்றின் கீழ் சிக்கியிருந்த நபரை மீட்டனர். முதல்கட்ட விசாரணையில் அவர் மதுராந்தகம் அடுத்த கரிக்கலி பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பதும் மதுபோதையில் ஆற்றில் படுத்து உறங்கியதும் மூன்று நாட்களாக உணவின்றி பரிதவித்து வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் பாலாற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரை சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com