‘கள்ளக்குறிச்சி வேண்டாம்.. விழுப்புரத்தில் சேருங்கள்’ - பெரியசெவலையில் மக்கள் போராட்டம்

‘கள்ளக்குறிச்சி வேண்டாம்.. விழுப்புரத்தில் சேருங்கள்’ - பெரியசெவலையில் மக்கள் போராட்டம்
‘கள்ளக்குறிச்சி வேண்டாம்.. விழுப்புரத்தில் சேருங்கள்’ - பெரியசெவலையில் மக்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க வேண்டி பெரியசெவலை கூட்டுரோட்டில் பொதுமக்கள் போராட்டம்.

கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதாக சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான நாட்களில் இருந்தே திருவெண்ணெய் நல்லூர் ஒன்றிய மக்கள் தங்கள் பகுதியை விழுப்புரம் மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். 

போராட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தன. எந்தெந்த வருவாய் கோட்டங்கள், தாலுகா அலுவலகங்களை புதிய மாவட்டத்தில் சேர்ப்பது என்பது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் தலைமையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில் கள்ளகுறிச்சி, விழுப்புரம் மாவட்டம் எல்லை தொடர்பான அரசாணையை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டது. 

அரசாணையில் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தின் பெரும் பகுதி விழுப்புரம் மாவட்டத்திலேயே சேர்க்கப்பட்டது. ஆனால் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தில் இருந்த பெரியசெவலை, டி.கொளத்தூர், சரவணபாக்கம், ஆமூர் உள்ளிட்ட ஊராட்சிகளை  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்த்ததால் அப்பகுதி மக்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

அத்துடன் தங்களை மீண்டும் விழுப்புரம் மாவட்டதில் சேர்க்க வேண்டியும், 2 கிலோ மீட்டர் தொலைவில் புதிதாக உருவாக்கப்பட்ட திருவெண்ணெய் நல்லூர் தாலுக்காவில் இணைக்கக்கோரியும் பொதுமக்கள் பெரியசெவலை கூட்டுரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கள்ளகுறிச்சி மாவட்டத்தில் தங்கள் பகுதியை இணைத்ததற்கு அவர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com