பெரியகுளம்: வெறிநாய் கடித்து பெண்கள் குழந்தைகள் உட்பட 39 பேர் காயம்

பெரியகுளம்: வெறிநாய் கடித்து பெண்கள் குழந்தைகள் உட்பட 39 பேர் காயம்
பெரியகுளம்: வெறிநாய் கடித்து பெண்கள் குழந்தைகள் உட்பட 39 பேர் காயம்

பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெறிநாய் கடித்து 8 பெண்கள் 2 குழந்தைகள் உட்பட 39 பேர் காயமடைந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலை முதல் தெருக்களில் நடந்து சென்றவர்களை வெறிபிடித்த நாய் ஒன்று கடிக்கத் துவங்கியது. இதனைத்தொடர்ந்து அந்த நாய் பழைய பேருந்து நிலையம் மற்றும் கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையில் செல்பவர்களையும் தொடர்ந்து கடித்ததில் 39 பேர் காயமடைந்தனர்.


இதில் காயமடைந்த ஆண்கள் 29 பேரும் பெண்கள் 8 பேரும் குழந்தைகள் இருவரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் நாய்க்கடி தடுப்பூசிகளை போட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்கள் அதிகரிப்பால் தொடரும் நாய்க்கடி தொல்லையை தடுத்து நிறுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com