மேற்கு வங்கத்தில் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த பெரம்பலூர் ராணுவ வீரர்

மேற்கு வங்கத்தில் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த பெரம்பலூர் ராணுவ வீரர்

மேற்கு வங்கத்தில் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த பெரம்பலூர் ராணுவ வீரர்
Published on

பெரம்பலூரைச் சேர்ந்த ராணுவவீரர் ஒருவர் மேற்குவங்க மாநிலத்தில் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள காரை கிராமத்தைச் சேர்ந்த சங்கர், கடந்த 23 வருடங்களாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 50 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துசென்ற சங்கர், மேற்குவங்கத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள் சங்கரின் குடும்பதினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து உயிரிழந்த சங்கரின் உடல் ராணுவ நடைமுறைகள் முடிந்து நாளை பெரம்பலூர் வருகிறது. உயிரிழந்த சங்கருக்கு ஜெகதீஸ்வரி (37) என்ற மனைவியும் விஷால் (11) ரித்தியன் (7) ஆகிய இருமகன்களும் உள்ளனர். ராணுவ வீரர் சங்கர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்தால் அவரது கிராமம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com