“அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட குடியிருப்புகளின் தரத்தினை ஆய்வு செய்க" - கே.பாலகிருஷ்ணன்

“அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட குடியிருப்புகளின் தரத்தினை ஆய்வு செய்க" - கே.பாலகிருஷ்ணன்
“அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட குடியிருப்புகளின் தரத்தினை ஆய்வு செய்க" - கே.பாலகிருஷ்ணன்

பெரம்பலூரிலும் குடிசை மாற்று வாரிய வீடுகளின் மீது புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுடைய தரத்தினை ஐ.ஐ.டி/அண்ணா பல்கலை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “கே.பி.பார்க் குடியிருப்புகளைப் போலவே இப்போது பெரம்பலூரிலும் குடிசை மாற்று வாரிய வீடுகளின் மீது புகார் எழுந்துள்ளது. தரமற்ற வீடுகளால் பண இழப்பு மட்டும் ஏற்படவில்லை, மிகப்பெரும் உயிர்ச் சேதங்களுக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது.

எனவே, அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுடைய தரத்தினை ஐ.ஐ.டி/அண்ணா பல்கலை நிபுணர்களையும், செயல்பாட்டாளர்களையும் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். எளிய மக்களின் உயிரோடு விளையாடியுள்ளவர்களை கண்டறிந்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com