பெரம்பலூர்: உடலில் காயங்களுடன் பொறியாளர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை

பெரம்பலூர்: உடலில் காயங்களுடன் பொறியாளர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை
பெரம்பலூர்: உடலில் காயங்களுடன் பொறியாளர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை

பெரம்பலூரில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் பொறியாளர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள மயானம் எதிரில் பாலத்தின் கீழே ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக இன்று காலை அவ்வழியே சென்றவர்கள் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதில், இறந்து கிடந்த நபர் பெரம்பலூர் ரோஸ் நகரைச் சேர்ந்த முருகேசன் என்பதும், நேற்றிலிருந்து இவரை காணவில்லை என அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவருக்கு முத்துச்செல்வி என்ற மனைவியும் (அரசு பள்ளி ஆசிரியை) கோபிநாத், மோனிஷா, என்ற பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முருகேசன் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொறியாளர் ஒருவர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரம்பலூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com