“புதிய கல்விக் கொள்கையை மக்கள் ஏற்கவில்லை” - பாரிவேந்தர் எம்.பி 

 “புதிய கல்விக் கொள்கையை மக்கள் ஏற்கவில்லை” - பாரிவேந்தர் எம்.பி 
 “புதிய கல்விக் கொள்கையை மக்கள் ஏற்கவில்லை” - பாரிவேந்தர் எம்.பி 

புதிய கல்விக் கொள்கையை உண்மையில் மக்கள் விரும்பவில்லை என பெரம்பலூர் மக்களவை எம்.பி பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். 

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது என்று சொல்லுங்கள் அதை பாராளுமன்றத்தில் வலியுறுத்துகிறேன் என மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இன்னும் என்னுடைய பார்வைக்கு வராத பல பிரச்னைகள் இருக்கும் என்பதை நான் அறிவேன். இதற்காக அருணாச்சலம் என்பவரை பணியமர்த்தியுள்ளேன். பெரம்பலூர் தேவைகள் குறித்து மக்களவையில் பேசியுள்ளேன். கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன். 

6 சட்டமன்றத் தொகுதி மக்களும் எளிதாக எங்களை அணுகக்கூடிய இடத்தில் அலுவலகம் அமைத்துள்ளோம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது கோரிக்கை மனுக்களை அங்கு அளிக்கலாம். இந்த ஐந்தாண்டு காலத்தில் மக்கள் மனதில் நிற்கும் வகையில் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என உறுதியாக உள்ளேன். தொழிற்சாலைகள், கல்விக்கூடங்கள், வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்களை கொண்டு வர முயற்சித்து வருகிறேன். இந்த தொகுதியில் இருக்கும் பிரச்னைகள் குறித்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து அதை தீர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். 

புதிய கல்விக்கொள்கையை உண்மையில் மக்கள் விரும்பவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறுத்த வேண்டும். அப்படி தானாக நிறுத்தினால் அது பெருந்தன்மை. இல்லையென்றால் தமிழக மக்கள் இன்னும் கடுமையாக போராட வேண்டியதுதான்.” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com