பெரம்பலூர்: கார் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி - சாலையில் திரும்ப முயன்ற போது விபத்து

பெரம்பலூர்: கார் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி - சாலையில் திரும்ப முயன்ற போது விபத்து
பெரம்பலூர்: கார் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி - சாலையில் திரும்ப முயன்ற போது விபத்து

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கார்முகில். இவர் தனது உறவினர்களுடன் காரில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு இன்று சென்றுள்ளார். காரில் 9 பேர் பயணம் செய்துள்ளனர். கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு, அவர்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சிக்கு திரும்பியுள்ளனர். வழியில், பெரம்பலூர் மாவட்டம் காரை பிரிவு அருகே உணவகத்திற்கு செல்வதற்காக திரும்பியுள்ளனர். அப்போது, பூலாம்பாடியில் இருந்து நெல்மூட்டை ஏற்றி வந்த லாரி ஒன்று அவர்களின் கார் மீது மோதியது.

இந்த விபத்தில் கார்முகில், அவரது மகன் லிங்கேந்திரன், உறவினர்கள் கண்ணன், தமிழரசி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற நான்கு பேர் படுகாயமடைந்தனர். ஒருவருக்கு பாதிப்பு ஏதும் இல்லை. விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்தவர்கள், காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்த சந்திரதனன் மற்றும் கிஷோர் ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கும், வேதவள்ளி, கதிரவன் ஆகிய இரண்டு பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com