கோவை: இணை நோய்கள் ஏதும் இல்லாத 5 மாத ஆண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு

கோவை: இணை நோய்கள் ஏதும் இல்லாத 5 மாத ஆண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு

கோவை: இணை நோய்கள் ஏதும் இல்லாத 5 மாத ஆண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு
Published on

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,506 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 4,512 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இன்று 6 மட்டுமே குறைவாக பதிவாகியுள்ளது. 

கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 113 பேர் உயிரிழப்பு. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,619 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 79 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 34 பேரும் உயிரிழந்தனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 16 பேர் பலியாகினர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 27 பேர் உயிரிழந்தனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத கோவையைச் சேர்ந்த 5 மாத ஆண் குழந்தை கொரோனாவால் உயிரிழந்தது.

கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் 17 மாவட்டங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

கோவை மாவட்டத்தில் மட்டுமே தினசரி கொரோனா பாதிப்பு 500க்கு மேல் நீடிக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com