\
வேலூரில் மின்வெட்டு
வேலூரில் மின்வெட்டுpt

வேலூர் | 8 மணிநேரம் மின்வெட்டு.. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

வேலூரில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Published on

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட விருப்பாச்சிபுரம், பாகாயம், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

பின்னர் மாலையில் மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், இரவு 8 மணி முதல் 10 மணி வரை அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விருப்பாச்சிபுரம் பகுதி மக்கள், வேலூரில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் தவெக எம்எல்ஏ வினோத் கண்ணன் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com