”மொழி பேரினவாதத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது” - நீதிபதி கிருபாகரன் கருத்து

”மொழி பேரினவாதத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது” - நீதிபதி கிருபாகரன் கருத்து

”மொழி பேரினவாதத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது” - நீதிபதி கிருபாகரன் கருத்து
Published on

மொழிகள் தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். 

வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், ” தமிழ்நாடு விடுதலை, தமிழ் மொழி என்ற கோஷங்களுடன் செயல்பட்டு வரும் சில அமைப்புகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற முகமூடியை அணிந்திருக்கின்றன. தமிழ்நாடு விடுதலை, தமிழ்மொழி முழக்கங்களை எழுப்பி சில அரசியல் கட்சிகளும் மாநிலத்தில் அசாதாரண நிலையை ஏற்படுத்த பிரசாரங்கள் மேற்கொண்டு வருகின்றன. 

1967 க்குபின் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சிக்கு தமிழ் மொழியே காரணம். மதவாத சக்திகளையும், பயங்கவாத சக்திகளையும் திடமாக எதிர்க்க வேண்டும். மொழி பேரினவாதத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது. இதுபோன்ற சக்திகள் தலையெடுக்க அனுமதிக்கக் கூடாது” என்று கூறினார்.

மேலும், “22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் மொழியை இருட்டடிப்பு செய்வதாகவோ, குறிப்பிட்ட சில மொழிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவோ மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது என மத்திய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ((மத்திய அமைச்சராக இருந்தபோது)) வீட்டில் வெடிகுண்டு வைத்த வழக்கில் தமிழ்நாடு விடுதலைப் படையின் கலைலிங்கம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்த வழக்கில் நீதிபதிகள் கிருபாகரன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com