கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 33வது வார்டு சித்தலூர் பகுதியில் சுகாதாரமான குடிநீர், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, உள்ளிட்டவைகளை முறையாக அமைத்து தர வலியுறுத்தி விருத்தாசலம் பெண்ணாடம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் காவல்துறை, நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காணப்படும் என அறிவித்தனர்.