குடியிருப்பு கட்டடம்
குடியிருப்பு கட்டடம்புதிய தலைமுறை

தமிழ்நாடு நலப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 1044 குடியிருப்புகள்... குறைகளை சரி செய்யுமா அரசு?

சென்னை மூலக்கொத்தளப் பகுதியில் தமிழ்நாடு அரசின் நலப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 1044 குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கிறது.
Published on

சென்னை மூலக்கொத்தளப் பகுதியில் தமிழ்நாடு அரசின் நலப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 1044 குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கிறது.

வீடற்று சாலை ஓரம் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்காக கட்டப்பட்ட இந்த குடியிருப்பின் கட்டுமானப் பணியானது கடந்த 2018-ம் ஆண்டில், தொடங்கப்பட்டு,கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த வீடுகள் கட்டும் பணி நிறைவடைந்த நிலையில், தற்பொழுது மக்களை இங்கு குடியமர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த குடியிருப்பு பகுதியில் சில குறைபாடுகள் இருப்பதாக இங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கிறார்கள். குடிநீர், கழிவு நீர் குறைபாடு இருப்பதாகவும், மின் இணைப்பில் பிரச்னை இருப்பதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதை சரி செய்து தர சொல்லி இங்கிருக்கும் மக்கள் வலியுறுத்துகிறார்கள். விவரம் வீடியோவில்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com