பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், சென்னை தியாகராய நகரில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. பக்ரீத் பண்டிகை நெருங்குவதாலும், விடுமுறை என்பதாலும் தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய கடைகளில் அபராதம் வசூலிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று பொதுமக்கள் கூட்டமாக நிரம்பி வழிகின்றன.