மக்களே விரைவில் ஆட்சியை மாற்றுவார்கள்: ஸ்டாலின்

மக்களே விரைவில் ஆட்சியை மாற்றுவார்கள்: ஸ்டாலின்

மக்களே விரைவில் ஆட்சியை மாற்றுவார்கள்: ஸ்டாலின்
Published on

ஆட்சியை மாற்ற வேண்டிய வேலையை திமுகவிற்கு பதிலாக, மக்களே விரைவில் மேற்கொள்வார்கள் என அக்கட்சியின் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசு தனது தோல்விகளை மறைக்க, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதாக கூறியுள்ளார். மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்றும், குறுக்கு வழியில் அல்ல என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆட்சியை பிடிக்க திமுக ஆசைப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது தங்கள் மீதான விமர்சனம் அல்ல என்றும், அவரது ஆதங்கமே என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் குடிநீர் தேவைக்கான அடிப்படை ஆதாரங்களாக விளங்கும் மேட்டூர் உள்ளிட்ட அத்தனை நீர்த்தேக்கங்களும் வறண்ட நிலையில் உள்ளதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ள அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்டத்துக்கு விரோதமான இந்த ஆட்சியால், மக்களின் தாகம் தீர்க்க ஒரு குவளை தண்ணீர் கூட தரமுடியவில்லை என்பது தான் உண்மை என அவர் கூறியுள்ளார். ஆட்சியை மாற்ற வேண்டிய வேலையை திமுகவிற்கு பதிலாக மக்களே விரைவில் மேற்கொள்வார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com