கவிழ்ந்த பீர் லாரி... விடுவோமா நாங்க..! அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள்!

செங்கல்பட்டில் லாரி விபத்துக்குள்ளானதால் அதில் இருந்த மதுபாட்டில்களை சிலர் அள்ளிச் சென்றனர்.

சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மதுராந்தகம் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் பள்ளத்தில் சரிந்தன. இது குறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள், மதுபாட்டில்களை அள்ளி சென்றனர்.

சிலர் பாட்டில்களை வயலில் பதுக்கி வைத்த நிலையில், அதனை ஊழியர்கள் தேடிசென்று எடுத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com