“பிரதமருக்காக பிரசாரம் செய்கிறார்; அரசியல்வாதிபோல் நடக்கிறார்”-ஆளுநர் பேச்சும் தொடரும் சர்ச்சைகளும்!

”கீழ்வெண்மணி கிராமத்தில் மக்கள் ஏழையாகவே இருக்கிறார்கள்” ஆளுநர் ரவி.

”கீழ்வெண்மணி கிராமத்தில் மக்கள் ஏழையாகவே இருக்கிறார்கள்” என்ற ஆளுநர் ரவியின் கருத்து விவாதப் பொருளாகியுள்ளது. இதுகுறித்து பத்திரிக்கையாளர் இந்திரகுமார் புதிய தலைமுறைக்கு பேசும்போது,

”ஆளுநர் ரவி ஒரு பிரசாரம் செய்வது போல செயல்படுகிறார். கீழ்வெண்மணி கிராமத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற தியாகிகள் நினைவு மண்டபம் CITU தொழிலாளர்களின் நிதியினால் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் அந்த நினைவு மண்டபமானது முழுதாக கட்டப்படவில்லை. ஆனால் ஆளுநர் ரவி பேசும்பொழுது, இங்கு கிராமத்தில் எல்லோரும் குடிசை வீடுகளாக இருக்கும்போது இவ்வளவு பெரிய கட்டிடம் தேவையா என்கிறார். நான் கேட்கிறேன் சென்னையில் உங்களுக்கு இவ்வளவு பெரிய இடம் தேவையா?” என்று காரசாரமாக எழுப்பப்பட்ட கேள்விகளை காண கீழிருக்கும் வீடியோவை காணலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com