உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: பாமக

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: பாமக

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: பாமக
Published on
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் உயர் நிலைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், தனித்துப் போட்டியிடப்போவதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்றும் நாளையும் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த உள்ளாட்சி, நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com