தமிழ்நாடு
நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் - தொடங்கியது சோதனை ஓட்டம்.. அக்.10-ல் முதல் போக்குவரத்து!
நாகையில் இருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு வரும் 10 ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், இன்றும் நாளையும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த கப்பலில் 150 பேர் வரை பயணிக்கலாம்.