திமுகவினர் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

திமுகவினர் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
திமுகவினர் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

திமுக தலைவர் அவர்களின் ஆணையை மீறி பேனர் வைப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்கமாட்டோம் என்று முதன் முதலில் உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார் என்பதைக் திமுகவினர் அனைவரும் அறிவீர்கள். அதன்பிறகு, திமுகவினர் பெரும்பாலானோர் பேனர் வைக்கும் பழக்கத்தைக் கைவிட்டனர் என்றாலும், ஒரு சிலர் இன்னும் பேனர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளைக் திமுக ஒருபோதும் அனுமதிக்காது.

ஆகவே அனுமதியின்றி பேனர்கள் ஏதும் இனி வைக்கவே கூடாது என்று திமுகவினர் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். திமுக தலைவர் அவர்களின் ஆணையை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com