காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு? ஆவடியில் பெண் இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு
ஆவடி அருகே மன அழுத்தத்தில் இருந்த பெண் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி வசந்தம் நகர், நேரு முதல் தெருவைச் சேர்ந்தவர் சில்வியா (25). டிப்ளமோ இன்ஜினியரான இவர், ஆவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று இரவு சில்வியா சாப்பிட்டு விட்டு படுக்கை அறையில் தூங்கி உள்ளார். பின்னர், இன்று காலை பெற்றோர் சென்று பார்த்தபோது, அங்கு சில்வியா புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
இதை பார்த்த பெற்றோர் அவரது உடலை கட்டிபிடித்து கதறி அழுதனர். தகவலறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சில்வியா தன்னுடன் பணியாற்றும் ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
மேலும், இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் சில்வியாவை கண்டித்து உள்ளனர். இதனால், மன அழுத்தத்தில் இருந்த சில்வியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. மேலும், புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.