\
மாற்றுத்திறனாளி வீரர்
மாற்றுத்திறனாளி வீரர்WebTeam

தங்கப்பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர்: சர்வதேச போட்டிகளில் விளையாட நிதி உதவி அளிக்குமா அரசு?

பாரா டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர், குடும்ப சூழல் காரணமாக சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளார்.
Published on

தர்மபுரி மாவட்டம் பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர், கணவனை இழந்த நிலையில் சிறிய கடை அமைத்து அதன் மூலம் வருமானம் ஈட்டி தனது இரண்டு பிள்ளையையும் படிக்க வைத்து வருகிறார். இவரது மூத்த மகன் இசையமுதன், கடந்த மாதம் பஞ்சாப்பில் நடந்துமுடிந்த தேசிய அளவிலான
மாற்றுத்திறனாளிகளுக்கான டேக்வண்டோ போட்டியில்
தங்கப்பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்.

தற்போது குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகிறார் இசையமுதன். இசையமுதன் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுமா? இசையமுதன் வைத்த கோரிக்கை என்ன என்பதை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com