"தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"- ஓ.பன்னீர்செல்வம்

"தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"- ஓ.பன்னீர்செல்வம்
"தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"- ஓ.பன்னீர்செல்வம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய, மாநில அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மை காலமாக தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டிருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது எனக் கூறியுள்ள ஓ.பன்னீர்செல்வம், தமிழக மீனவர்கள் அச்சமின்றி தங்களது மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: தமிழில் கேள்வி கேட்ட உறுப்பினர், இந்தியில் பதிலளித்த அமைச்சர் - மக்களவையில் சூடான விவாதம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com