குருத்தோலை ஞாயிறு: வேளாங்கண்ணி பேராலயத்தில் கையில் ஓலையுடன் பவனிவந்த பக்தர்கள்

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பவனி வந்தனர்.
Velankanni
Velankannipt Desk

இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று நடைபெற்றது.

பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கு தந்தைகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து குருத்தோலை பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியப்படி ஹோசன்னா பாடியவாறு பவனியாக சென்றனர்.

இதைத் தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com