தூத்துக்குடி கடல் பகுதியில் பாகிஸ்தான் படகு; ஹெராயின், துப்பாக்கிகள் பறிமுதல்!

தூத்துக்குடி கடல் பகுதியில் பாகிஸ்தான் படகு; ஹெராயின், துப்பாக்கிகள் பறிமுதல்!

தூத்துக்குடி கடல் பகுதியில் பாகிஸ்தான் படகு; ஹெராயின், துப்பாக்கிகள் பறிமுதல்!
Published on

தூத்துக்குடி கடலோரப் பகுதியில் பல கிலோ கிராம் அளவிலான ஹெராயின் 10 கைத்துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த பாகிஸ்தானை சேர்ந்த படகு இந்திய கடலோரக் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடலோர பாதுகாப்பு படையினரின் ரோந்து பணியின் போது இலங்கை எல்லை அருகே இந்தியக் கடல் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த பாகிஸ்தான் படகில் இருந்த ஆறு பேரை விசாரித்து படகை சோதனையிட்டபோது ஹெராயின் கைத்துப்பாக்கிகள் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

 பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திலிருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போதைக்கடத்தல் கும்பல் என்பது அம்பலமாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com