இவரது இதயம் உட்பட உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டதையடுத்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது. இதற்கான அறுவை சிகிச்சை அதே மருத்துவமனையில் நடைபெற்றது. இதயம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், இடது சிறுநீரகம் சென்னை வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் இரண்டு கண்கள் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.