சென்னையில் டீக்கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு

சென்னையில் டீக்கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு

சென்னையில் டீக்கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு
Published on

சென்னையில் மாலை 6 மணியுடன் டீக்கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உள்ள நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். முன்னதாக, தமிழகத்தில் நேற்று மாலை 6 மணிமுதல் ஏப்ரல் 1ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

இதனைதொடர்ந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி நேற்று பிறப்பித்தார். அப்போது பேசிய அவர், “21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும். கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் சமூக விலகல் என்பது மிக முக்கியம். சுகாதாரமாக இருப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்” எனக் கேட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்து, ரயில்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் சென்னையில் மாலை 6 மணியுடன் டீக்கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com