மதுரை ஆவின் தலைவரானார் ஒபிஎஸ் தம்பி ஓ.ராஜா !

மதுரை ஆவின் தலைவரானார் ஒபிஎஸ் தம்பி ஓ.ராஜா !
மதுரை ஆவின் தலைவரானார் ஒபிஎஸ் தம்பி ஓ.ராஜா !

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து  மதுரை ஆவின் தலைவராக ஓ.ராஜா பதவியேற்றுள்ளார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா. இவர் பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவராக இருந்தார். இந்த சுழலில் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்து வந்த அவரை கடந்த 19 ஆம் தேதி அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தனது செயலுக்கு நேரிலும், கடிதம் மூலமும் ஓ.ராஜா வருத்தம் தெரிவித்திருந்தார். இதனால் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டனர்.இந்நிலையில் ஓ.ராஜா மதுரை ஆவின் தலைவராக இன்று பதவியேற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com