விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராவாரா ஓபிஎஸ்?

விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராவாரா ஓபிஎஸ்?

விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராவாரா ஓபிஎஸ்?
Published on

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜ‌ராக சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அதில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மற்ற மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அப்போலோ செவிலியர்கள், அப்போலோ மருத்துவர்கள்,அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன்,சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் என பலரும் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த விவரங்களை அளித்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த 29-ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அன்று அவர் ஆஜராகததால் மீண்டும் இன்று ஆஜராக‌ சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஆஜராகுவரா..? இல்லையா..? என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com