முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்.. அதிமுகவினர் கொடுத்த ரியாக்ஷன்! #Video

“தமிழ்நாடு விவசாயிகள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு மக்கள் மகிழத்தக்க வகையில் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்” - ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இதில் "சட்டப்பேரவை 110 விதியின் கீழ் தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரிக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் வைக்கப்படும். வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருதுகள் வழங்கப்படும்" என அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

எடப்பாடி பழனிசாமி
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்; அரசியல் தலைவர்கள் இரங்கல்!
எம்.எஸ்.சுவாமிநாதன்
எம்.எஸ்.சுவாமிநாதன்

இதன்பின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்து பேசுகையில், “தமிழ்நாடு விவசாயிகள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு மக்கள் மகிழத்தக்க வகையில் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்” என தெரிவிர்த்தார். இதற்கு அதிமுக-வினர் பலரும் சற்றே முகச்சுளிப்பை வெளிப்படுத்தினர். ஓபிஎஸ் பேசியதும், அதற்கான அதிமுக-வினரின் ரியாக்‌ஷனும், செய்தியில் வீடியோவாக இணைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com