ஒவ்வொருவராக வருவார்கள்: ஓ.பன்னீர்செல்வம்

ஒவ்வொருவராக வருவார்கள்: ஓ.பன்னீர்செல்வம்

ஒவ்வொருவராக வருவார்கள்: ஓ.பன்னீர்செல்வம்
Published on

மஃபா பாண்டியராஜனைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வருவார்கள் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக தலைமைக்கு எதிராக குரல் கொடுத்துள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இன்று ஒரே நாளில் நாமக்கல், கிருஷ்ணகிரி எம்பிக்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை வரவேற்றுப் பேசிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களின் ஒருமித்த கருத்தை ஏற்று அமைச்சர் பாண்டியராஜன் தமது அணியில் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வந்து இணைவார்கள் என்றும் பன்னீர்செல்வம் கூறினார். தமிழகத்தின் ஆட்சி ஒரு குடும்பத்தின் சொத்தாக மாறுவதைத் தடுத்து நிறுத்தும் தர்ம யுத்தத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் பாண்டியராஜன் தற்போது இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com