‘எங்கள் வாதங்கள் அனைத்தையும் நீதிமன்றம் ஏற்றது’- ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்

‘எங்கள் வாதங்கள் அனைத்தையும் நீதிமன்றம் ஏற்றது’- ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்

‘எங்கள் வாதங்கள் அனைத்தையும் நீதிமன்றம் ஏற்றது’- ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்
Published on

நியாயத்திற்கு அம்மாவின் ஆசியுடன் கிடைத்த வெற்றி என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், `இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். யாரும் தனிக் கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீர்ப்பு குறித்து பேசிய ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், “ நியாயத்திற்கு அம்மாவின் ஆசியுடன் கிடைத்த வெற்றி. கட்சியை வழிநடத்தும் பொறுப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது என்ற வகையில் இன்றைய தீர்ப்பு உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் காலாவதி ஆகவில்லை. அதிமுக மீண்டும் வீறுகொண்டு எழுவதற்கு அனைத்துவிதமான ஒப்புதல்களையும் நீதிமன்றம் கொடுத்துள்ளது. எங்களது தரப்பு அனைத்து வாதங்களையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com