"முல்லைப் பெரியாறில் தமிழக உரிமையை நிலைநாட்டுக" - ஓபிஎஸ் வலியுறுத்தல்

"முல்லைப் பெரியாறில் தமிழக உரிமையை நிலைநாட்டுக" - ஓபிஎஸ் வலியுறுத்தல்
"முல்லைப் பெரியாறில் தமிழக உரிமையை நிலைநாட்டுக" - ஓபிஎஸ் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து இடையூறு செய்வதாக கேரள அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிக்கு கட்டுமானப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதை கேரள அதிகாரிகள் தடுத்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். இருதரப்பு திறனாய்வு கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக பொறியாளர்கள் இருவர், வெளிநடப்பும் செய்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இவ்வாறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்துவருவது தமிழக உரிமையை பறிக்கும் செயலாகும் என்று கூறியுள்ள அவர், இந்த விஷயத்தில் திமுக அரசு தீவிரம் காட்டுவதாக தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார்.

எனவே, கேரள முதலமைச்சருடன் தனக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com