"பொங்கலுக்கு முன்பே பரிசுத் தொகுப்பு பொருட்கள் கிடைக்க வேண்டும்" - ஓபிஎஸ் வலியுறுத்தல்

"பொங்கலுக்கு முன்பே பரிசுத் தொகுப்பு பொருட்கள் கிடைக்க வேண்டும்" - ஓபிஎஸ் வலியுறுத்தல்
"பொங்கலுக்கு முன்பே பரிசுத் தொகுப்பு பொருட்கள் கிடைக்க வேண்டும்" - ஓபிஎஸ் வலியுறுத்தல்

பொங்கல் பண்டிகைக்கு முன்பே அனைத்துக் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் அனைத்துப் பொருட்களும் நல்ல முறையில் கிடைக்க ஆவன செய்யவேண்டும் என முதலைமச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படுவதில் குளறுபடி நடந்திருப்பதாக மக்கள் கூறுவதாக ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பொருட்கள் தரமற்று இருப்பதாகவும், அனைவருக்கும் 21 பொருட்களும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 31ஆம் தேதி வரை பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறியிருப்பது, அதன் நோக்கத்தை சிதைக்கும் வகையில் உள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com