கருத்துக் கணிப்புகளை நம்பாதீர்கள்; வெற்றி மாலையை சூட தயாராகுங்கள்: ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை

கருத்துக் கணிப்புகளை நம்பாதீர்கள்; வெற்றி மாலையை சூட தயாராகுங்கள்: ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை
கருத்துக் கணிப்புகளை நம்பாதீர்கள்; வெற்றி மாலையை சூட தயாராகுங்கள்: ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை

வெற்றி மாலையை சூட தயாராகுங்கள் என்று அதிமுக தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6 இல் நடத்தப்பட்டது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் 2016 இல் நடைபெற்ற கருத்துக் கணிப்புக்கு மாறாக அதிமுக ஆ்டசி அமைத்தது. அதனால் தொண்டர்கள் சோர்வடையாமல் துணிச்சலுடன் செயல்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும், இரட்டை அலையே என்னென்றும் அதிமுகவே வெல்லும். கடமை அழைக்கிறது கண்மணிகளே வெற்றி மாலையை சூட தயாராகுங்கள் என்று உற்சாகமூட்டும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று வெளியான பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com