மதுரையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இளைஞர்களைச் சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. அதே நேரத்தில் காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணம் தொடங்குகிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
தொண்டர்களின் கருத்தையும் உணர்வுகளையும் அறிய அதிமுகவின் இரு அணிகளும் களம் இறங்கியுள்ளன. இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் இன்று முதல் பயணம் மேற்கொள்கின்றனர்.
இதுவரை இணைப்பு, பேச்சுவார்த்தை என இரு அணிகளிலும் அடுத்தடுத்த நகர்வுகள் இருந்த நிலையில், தற்போது தொண்டர்களை சந்திப்பதில் இரு அணிகளும் முனைப்பு காட்டிவருகின்றன. அண்மையில் சேலம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அதேபோல, மதுரையில் மெகா யூத் மேளா என்று வர்ணிக்கும் அளவுக்கு அதிக அளவில் இளைஞர்கள் பங்கேற்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்