மகிழ்ச்சியுடன் வேட்பாளரை அறிவித்துள்ளேன்; எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது - ஓபிஎஸ்

மகிழ்ச்சியுடன் வேட்பாளரை அறிவித்துள்ளேன்; எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது - ஓபிஎஸ்
மகிழ்ச்சியுடன் வேட்பாளரை அறிவித்துள்ளேன்; எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது - ஓபிஎஸ்

மகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன், எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது என்று துணைமுதல்வர் ஒபிஎஸ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பிற்குபின் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் “ அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் குழப்பம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளில் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன், எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது” என்று தெரிவித்தார்.

இன்று காலை அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியின் பெயரை, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். இந்த அறிவிக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் சென்னை மற்றும் சேலத்தில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். 1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தற்போதுதான், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com