விழுப்புரத்தில் விசாரணைக் கைதிக்கு கொரோனா: அச்சத்தில் சிறைவாசிகள்..!

விழுப்புரத்தில் விசாரணைக் கைதிக்கு கொரோனா: அச்சத்தில் சிறைவாசிகள்..!
விழுப்புரத்தில் விசாரணைக் கைதிக்கு கொரோனா: அச்சத்தில் சிறைவாசிகள்..!

விழுப்புரம் கிளை சிறையில் விசாரணைக் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் சிறைக்குள்ளே தனிமைப்படுத்தப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் நகரில் இயங்கிவரும் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி ஒருவருக்கும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 11 கைதிகள் உள்ள நிலையில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதால் அவர் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டார்.

மேலும் அவரை விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறுவதற்காக சிறை கண்காணிப்பாளர் பரிந்துரை செய்ததுள்ளார். கிளைச் சிறையில் விசாரணைக் கைதி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது சிறைவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com