திண்டுக்கல் முத்தழகுபட்டியில் செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று தொடங்கி இன்று வரை நடைபெறும் இந்த திருவிழாவில் கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட ஆயிரம் ஆடுகள், கோழிகள் சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு சமபந்தி அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.