ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்.. விரைவில் முதல்வர் அறிவிப்பார் என காமராஜ் விளக்கம்

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்.. விரைவில் முதல்வர் அறிவிப்பார் என காமராஜ் விளக்கம்
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்.. விரைவில் முதல்வர் அறிவிப்பார் என காமராஜ் விளக்கம்

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்

.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி “ ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் பரிசோதனை முறையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எப்போது விரிவுபடுத்தப்படும்” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் “ தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டிருப்பதால் ஸ்மார்ட் கார்டுகளின் மூலமாக பொதுமக்கள் தாங்களே பெயர் திருத்தம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் திமுக உறுப்பினர் கருணாநிதி கூறியதுபோல தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் சோதனை முறையில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com