விஜயதசமியன்று, தொடங்கப்படும் எந்தவொரு செயலும் சிறந்த வெற்றியைத் தரும் என்பது நம்பிக்கை. அந்த தினத்தில், குழந்தைகள் தங்களது கல்விப் பயணத்தை தொடங்கும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி கோயில்களில் நடைபெற்றது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் கோயிலில் ஏராளமானோர், வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கெடுத்து, தங்கள் குழந்தைகளுக்கு கல்விப் பயணத்தை தொடக்கி வைத்தனர். குழந்தையின் சுட்டு விரலை பிடித்து, தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை எழுத வைத்தனர்.