கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு... ஆம்னி பேருந்துகள் சேவை தொடங்கியது

கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு... ஆம்னி பேருந்துகள் சேவை தொடங்கியது
கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு... ஆம்னி பேருந்துகள் சேவை தொடங்கியது

சாலை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகள் சேவை தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனா பொது முடக்க தளர்வின் ஒரு பகுதியாக கடந்த மாதம் அனைத்து விதமான பேருந்து சேவைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், 6 மாதங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்த நிலையில் சாலை வரி செலுத்துவதிலிருந்து தமிழக அரசு விலக்கு அளித்த நிலையில், ஆம்னி பேருந்து சேவை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆம்னி பேருந்துகள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 500 பேருந்துகள் இயக்கப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆம்னி பேருந்து சேவை தொடங்கியுள்ள நிலையில், பயணிகள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்குப் பிறகே பேருந்துகளில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com