ஆசிரியையை அரிவாளால் வெட்டிய முன்னாள் மாணவர்..

ஆசிரியையை அரிவாளால் வெட்டிய முன்னாள் மாணவர்..
ஆசிரியையை அரிவாளால் வெட்டிய முன்னாள் மாணவர்..

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முன்னாள் மாணவர் ஒருவர் வகுப்பறையில் புகுந்து ஆசிரியையை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிங்கபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவர் சோகண்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். யோகேஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை பூங்கொடியின் பரிந்துரையின்பேரில், யோகேஷ் இந்த ஆண்டு பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் சில மாதங்கள் கழித்து இன்று பள்ளிக்குச் சென்ற யோகேஷ், வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியை பூங்கொடியை அரிவாளால் வெட்டி உள்ளார். 

தலையில் பலத்த காயமடைந்த ஆசிரியை பூங்கொடிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஆசிரியர்கள் யோகேஷை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com