பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதல் - சிசிடிவி காட்சி

பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதல் - சிசிடிவி காட்சி
பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதல் - சிசிடிவி காட்சி

அரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 

பெரியார் நகரில் வசித்து வரும் முருகேசன் என்பவர் தனது பேத்தியுடன் சின்ன கடைத்தெருவில் உள்ள மருந்தகத்திற்கு மருந்து வாங்க சென்றுள்ளார். ‌மருந்து வாங்கிவிட்டு இருசக்கர வா‌கனத்தில் ‌புறப்பட தயாராக அவர் உட்கார்ந்திருந்த நிலையில், அவரது பேத்தி வாகனத்தில் ஏற முயன்ற போது, பின்னால் வந்த மினி லாரி பைக் மீது மோதி விபத்துக்கு‌ள்ளானது. 

நூலிழையில் சிறுமி உயி‌ர் தப்பினார். ‌‌படுகாயம் அடைந்த முருகேசன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சி காண்போர் நெஞ்சை பதற வைக்கும் விதத்தில் உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com