ஆம்புலன்ஸ் வர 4 மணி நேரம் தாமதமானதால் முதியவர் உயிரிழந்ததாக புகார்

ஆம்புலன்ஸ் வர 4 மணி நேரம் தாமதமானதால் முதியவர் உயிரிழந்ததாக புகார்
ஆம்புலன்ஸ் வர 4 மணி நேரம் தாமதமானதால் முதியவர் உயிரிழந்ததாக புகார்

 108 ஆம்புலன்ஸ் வர 4 மணி நேரம் தாமதம் ஆனதால் முதியவர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

 செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உறவினர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அந்த முதியவர் திருப்போரூர் அடுத்த பொன்மார் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கு ஏற்கெனவே நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு அந்த இடம் சவுகரியமாக இல்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் அங்கு கொடுக்கப்பட்ட உணவும் அவருக்கு சரிவரவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் 4 மணி நேரம் கழித்தே ஆம்புலன்ஸ் வந்து முதியவரை அழைத்துச் சென்றுள்ளது. நீண்ட நேரம் காத்திருந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுமே உயிரிழந்தார். இதனை அடுத்து ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனதே முதியவரின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் பிற நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களை தனிமைப்படுத்த தனி இடம் ஒதுக்க வேண்டும், அல்லது வீடுகளில் தங்க வைத்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்

 இதுகுறித்து தெரிவித்த வண்டலூர் வட்டாட்சியர், '' குறிப்பிட்ட அந்த நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் மற்றொரு நோயாளியை ஏற்றிக்கொண்டு சென்று விட்ட காரணத்தினால் ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு வரமுடியவில்லை. உயிரிழந்த முதியவர் தனக்கு ஏற்கனவே புற்றுநோய் இருப்பதை சுகாதாரத்துறையிடம் தெரிவித்தாரா என்பதும் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com