கோவையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவர் கைது

கோவையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவர் கைது
கோவையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவர் கைது

கோவையில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புளியகுளம், தாமுநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், பீளமேடு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்களது 7 வயது மகளை உறவினர் வீட்டில் தங்க வைத்து விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் சிறுமியின் உறவினரான (சிறுமியின் தாய்க்கு சித்தப்பா) வரதராஜன் (65) என்பவர்அந்தக் குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால் வேதனையடைந்த சிறுமி நடந்தச் சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com