பூவிருந்தவல்லியில் துணை வட்டாட்சியருக்கு கொரோனா - வட்டாட்சியர் அலுவலகம் மூடல்

பூவிருந்தவல்லியில் துணை வட்டாட்சியருக்கு கொரோனா - வட்டாட்சியர் அலுவலகம் மூடல்
பூவிருந்தவல்லியில் துணை வட்டாட்சியருக்கு கொரோனா - வட்டாட்சியர் அலுவலகம் மூடல்

பூவிருந்தவல்லியில் துணை வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

பூவிருந்தவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்தவருக்கு,  கடந்த ஒரு சில தினங்களாக கொரோனா அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைபடுத்து அவர் பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து பூவிருந்தவல்லி வட்டாட்சியர் குமார் தலைமையில், வட்டாட்சியர் அலுவலகம் முழுவதுமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.  தற்காலிகமாக வட்டாட்சியர் அலுவலகமும் மூடப்பட்டுள்ளது. அதேபோல் தற்காலிகமாக மூடப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள பூவிருந்தவல்லி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் என வட்டாட்சியர் குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com